"ஐயோ! பாத்ரூமுக்குள் வந்து ஒளிந்து பார்க்கிறாரே .." -அடுத்து ராணுவ வீரரின் மனைவிக்கு அதிகாரியால் நடந்த கொடுமை.

 
bath

ஒரு  ராணுவ வீரரின் வீட்டுக்குள் வந்து ,அவரின் மனைவியிடம் குளியல் அறையில் தகாத முறையில் சக வீரர் நடக்க முயன்றதால் ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது 

Bubble Bath Pictures | Download Free Images on Unsplash

ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பில் வசித்து வரும் ராணுவ வீரரின் மனைவி ஒருவர்  கடந்த சில நாட்களுக்கு முன் மாலையில்,  தன் வீட்டு பாத்ரூமில்  குளித்து கொண்டிருந்தபோது, ராணுவ உயரதிகாரி ஒருவர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்ததால் அந்த அதிகாரி பாத்ரூமுக்குள் நுழைந்து , குளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
இதனால், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.  இதில், வெளியே  இருந்த அவரது கணவர் பதறியடித்து ஓடி வந்துள்ளார்.  இருவரும், அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றுள்ளனர்.  எனினும், அவர் தப்பியோடி விட்டார்.
அந்த தம்பதி உடனடியாக நடந்த சம்பவம் பற்றி ராணுவ உயரதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.  அவர்கள், இந்த விஷயத்தை  வெளியே சொல்லகூடாது என்று அந்த தம்பதியை மிரட்டி ,  அவர்களை வெளியே வரவிடாமல் வீட்டிலேயே முடக்கி உள்ளனர் .
இதனை தொடர்ந்து, அவர்கள் போன் மூலம் போலீசில் புகார் கொடுத்ததும் இந்த வழக்கில் நான்கு ராணுவ உயரதிகாரிகளின் பெயர்  சேர்க்கப்பட்டு உள்ளது என போலீசார் கூறியுள்ளார்கள் .  
இதுபற்றி பாதுகாப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி கூறுகையில் இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் மீது இந்திய ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.