கள்ளக்காதலி வர மறுத்ததால் தீக்குளித்த கள்ளக்காதலன்- அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

 
ஃப்

கள்ளக்காதலியை உல்லாசத்துக்கு அழைத்த போது அவர் வர மறுத்து விட்டதால் திடீரென்று கள்ளக்காதலன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து விட்டார்.   உடல் முழுவதும் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

 மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்.   கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவருடன் தகராறு செய்து அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டார்.   இந்த கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விட்டு சில மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

 செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பகுதியில் தங்கியிருந்து தெருத்தெருவாக பாட்டில், பழைய பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.   அப்போது சுதா என்கிற பெண்ணுடன் விக்னேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது .  இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள்.

ஃபி

 விக்னேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து சுதாவை துன்புறுத்தி வந்ததால் அவரை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார் .  இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சுகாவிடம்  சென்று உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார்.

 தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தும் உன்னுடன் எனக்கு இனி எந்தவித தொடர்பும் கிடையாது.   நீ எனக்கு தேவையில்லை என்று பிடித்து தள்ளி இருக்கிறார்.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் அங்கிருந்த பைக்கில் பெட்ரோலை பிடித்து தன் மேல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எச்சரிக்திருக்கிறார் .

அப்போதும் சுதா அவர் மறுத்துவிட்டதால்,  தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கிறார்.   உடல் முழுவதும் பற்றி எரிந்ததில் அலறித் துடித்த போது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விக்னேஷ் தீக்குளித்த அந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தி வைக்கிறது.