காதலனுடன் சேர்ந்து மது அருந்திய காதலி! போதையில் வெட்டிக்கொலை

 
me

 கள்ளக்காதலனுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார் அந்தப் பெண்.  போதையில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை வெட்டி கொலை செய்துவிட்டு குஜராத்தில் சென்று தலைமறைவாய் இருக்கிறார் அந்த வாலிபர்.   ஓசூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அடுத்த கலுகொண்ட பள்ளி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் மேரியம்மா.  இவரது கணவர் காலமாகிவிட்டதால் மேரியம்மா தனியாக வசித்து வந்திருக்கிறார்.   ஒடிசாவை சேர்ந்த சோனுடன் பழக்கம் இவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

so

 சோனு மத்திகிரி என்கிற பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போதுதான் சோனுவுக்கும் மேரியம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறி இருக்கிறது.  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.   மேரியம்மாவுக்கு சோனு அடிக்கடி பண உதவியும் செய்து வந்துள்ளார். 

 கடந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று மேரியம்மாவும் சோனுவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.   அப்போது சோனுவிடம் மேரியம்மா பணம் கேட்டிருக்கிறார்.   இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சோனு,  மண்வெட்டியை எடுத்து மேரியம்மாவை வெட்டி கொலை செய்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து மேரியம்மா உயிரிழந்ததும் போலீசுக்கு பயந்து குஜராத் மாநிலத்திற்கு சென்று தலைமறைவாகி இருக்கிறார் சோனு.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலில் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேரியம்மாவின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  அப்போது மேரியம்மாவின் கள்ளக்காதலன் சோனு குறித்த விவரம் தெரியவந்ததும் அவர் பணிபுரிந்த நிறுவனத்திற்கு சென்று தேடியிருக்கிறார்கள்.  அப்போதுதான் தலைமறைவாகிவிட்ட தகவல் தெரிய வந்திருக்கிறது. 

 குஜராத் மாநிலத்தில் மார்பி என்கிற பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்று அங்கே பதுங்கி இருந்த சோனுவை கைது செய்துள்ளனர்.  ஓசூருக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.