கணவன் உயிருக்கு போராட்டம் - காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த வேலை

 
ka

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆளை  அனுப்பிவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் ஈண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன்.   இவரின் மனைவி கிருத்திகா.  இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார் நடராஜன்.

 நேற்று காலையில் நடராஜன் வீட்டில் இருந்தபோது அவசர வேலையாக வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிருத்திகா வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.   அவரை வெளியே சென்றிருந்த சிறிது நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் நடராஜனின் கை, கால், கழுத்தில் சரமாரியாக வெட்டு இருக்கிறார்.  

 இதனை முடிந்த அளவிற்கு போராடி தடுக்க முயன்றும் ரத்தம் அதிகமாக வெளியேறி மயங்கியதால் நடராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருக்கிறார்.   ஆனால் அவர் போட்ட அலறல் சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது நடராஜன் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.   அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததும் நடராஜன் வெட்டியவர் தப்பியிருக்கிறார்.   அந்த மர்ம நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து பரமத்தி வேலூரில் போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

k

 ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்த அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  மேல்சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் நடராஜன்.   

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்திருக்கிறது.   நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கு   கோபாலனுடன் கள்ள உறவு இருந்துள்ளது.   இதை அறிந்த நடராஜன் மனைவி கிருத்திகாவை கண்டித்திருக்கிறார்.   இதனால் பல முறை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

 இந்த நிலையில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்திருக்கிறார் கிருத்திகா.  காதலனுடன் சேர்ந்து தனியார் விடுதியில் வேலை பார்க்க வந்த யோகேஸ்வரன் என்பவருக்கு பணம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.   திட்டத்தின்படி கிருத்திகா வீட்டை விட்டு வெளியே சென்றதும் யோகேஸ்வரன் அரிவாளுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  

 கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆளை அனுப்பி விட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடிய கிருத்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் காதலன் கோபாலை தேடி வருகின்றனர்.