நான் கருப்பா இருக்குறேன்; குழந்தை மட்டும் எப்படி சிவப்பா பிறந்திருக்குது! தந்தையின் கொடூரம்
நான் கருப்பாய் இருக்கிறேன். குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக பிறந்தது என்று மனைவி மீது சந்தேகப்பட்டு அந்த ஆத்திரத்தில் குழந்தையை இரும்பு பூட்டால் தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது குழந்தை. மனைவியையும் கொலை செய்யத் முயன்றிருக்கிறார். அதற்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட்டதால் மனைவி உயிர் தப்பியிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்த கொடூரம்.
ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம் 6வது பகுதியைச் சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி வீணா. இத்தம்பதிக்கு முனிவர்ஷா என்கிற ஆறு மாத குழந்தை இருந்தது. இத்தம்பதியினர் குழந்தையுடன் ரங்கா முரளி நன்னூர் பகுதியில் இருக்கும் பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். குழந்தை பிறந்ததிலிருந்து நான் கருப்பாக இருக்கிறேன். குழந்தை மட்டும் எப்படி சிறப்பாக பிறந்தது என்று அடிக்கடி மனைவியிடம் சந்தேகமாக கேட்டு சண்டை போட்டிருக்கிறார்.
குழந்தை சிகப்பாக பிறந்ததால் குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று சொல்லி தொடர்ந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரங்கா முரளி, மீண்டும் குழந்தை சிவப்பாக இருக்கும் விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்து இருக்கிறார். அப்போது மனைவி மீது சந்தேகம் அதிகரித்து இருக்கிறது.
மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் இரும்பு பூட்டை எடுத்து எனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டு இரும்பு பூட்டினால் தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார். இதில் 6 மாத குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது. அப்போது வீணா போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள்.
குழந்தையை கொன்ற ரங்கா முரளி, மனைவி வீணாவையும் கொல்ல முயன்றிருக்கிறார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விட்டதால் அவர் உயிர் தப்பியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த குழந்தையை பார்த்து விட்டு கர்னூல் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை ரங்கா முரளியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மனைவியின் நடத்தையின் மீது உள்ள சந்தேகத்தால் பெற்ற குழந்தையை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தையின் செயல் கர்நூல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.