மனைவி, 2 பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று ஐ.டி.ஊழியர் தற்கொலை!

 
tn

சென்னை பல்லாவரம் அருகே  மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு , தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ஐடி ஊழியர் பிரகாஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் ,நித்யஸ்ரீ என்ற 13 வயதில் மகளும், ஹரிஹரன் என்ற 8 வயது மகனும் உள்ளனர்.

murder

இந்நிலையில் ஐடி ஊழியர் பிரகாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.