சிக்கன் குழம்பு வைக்காததால் காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை
சிக்கன் குழம்பு வைத்து தரவில்லை என்பதற்காக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் காதல் கணவர். அந்த கத்தி உடனே போலீசில் சென்று சரணடைந்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் தாவணகரே ஹரிஹர பகுதி. இப்பகுதியில் உள்ள பன்னிகோடு கிராமம் . இக்கிராமத்தில் வசித்து வந்தவர் கெஞ்சப்பா(34). இவரது மனைவி ஷீலா(28). கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .
திருமணத்திற்குப் பின்னர் கெஞ்சப்பா மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வழக்கம்போலவே வீட்டிற்கு வந்து இருக்கிறார் கெஞ்சப்பா.
வீட்டிற்கு வந்த கெஞ்சப்பா, சிக்கன் குழம்பு சமைத்து தரும்படி மனைவி ஷீலாவிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ஷீலா, இப்போது சிக்கன் குழம்பு என்னால் வைக்க முடியாது. வீட்டில் இருப்பதை சாப்பிடு என்று சொல்லியிருக்கிறார்.
மது போதையில் இருந்த கெஞ்சப்பா, எனக்கு இப்போது சிக்கன் குழம்பு தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து இருக்கிறார். அதற்கு ஷீலா, என்னால் முடியாது நீ எங்காவது போய் சாப்பிட்டுக் கொள் என்று சொல்லி இருக்கிறார் . இதில் ஆத்திரமடைந்த கெஞ்சப்பா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் ஆவேசமாக குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஷீலாம் அங்கேயே உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து அந்தக் கத்தியை எடுத்துக்கொண்டு நேராக ஹரிஹரா போலீசில் சென்று, மனைவியை குத்தி கொன்று விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார்.
சிக்கன் குழம்பு வைத்து தரவில்லை என்பதற்காக மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் சம்பவம் பன்னிகோடு கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.