உடலுறவுக்குப் பின் நடிகையை நிர்வாணமாக நிற்க வைத்து...நடிகரின் அதிர்ச்சி வாக்குமூலம்

 
க

 பிரபல ஆபாச திரைப்பட நடிகை கரோல் மால்டசி(26).  இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் ஒரு வாசனை திரவியம் விற்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது .  கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால்,  வருமானத்திற்காக,   ‘ஒன்லி ஃபேன்ஸ்’ என்கிற ஆபாச வலை தளத்தில் அவர் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.  

மல்

 இவரது இவரது வீட்டின் அருகே இருக்கும் டேவிட் ஃபாண்டானோ(43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.  இதையடுத்து இருவரும் உடலுறவு செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வலை தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.   அப்படி ஒரு வீடியோ எடுத்து முடித்த பின்னர் ஒரு நாள் கரோல் மால்டசியை கொலை செய்திருக்கிறார் டேவிட்.   அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று தோழி மால்டசியை  காணவில்லை என்று அவரே புகார் அளித்திருக்கிறார்.

ட

 போலீசாருக்கு பாண்டோனோ மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.   இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,  மால்டசி வசித்து வந்த பகுதியில் குப்பை கழிவுகளில் பெண் ஒருவரின் கைகள் துண்டு துண்டாக கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.   அதை வைத்து விசாரணை நடத்தியதில் அது காணாமல் போன மால்டசியின் கைகள் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இதையடுத்து டேவிட் பாண்டோனாவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.   விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.  கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று நானும் மால்டசியும் உடலுறவு செய்யும் வீடியோ எடுத்தோம்.   அதன் பின்னர் மால்டசியை நிர்வாணமாக கம்பியில் கட்டி வைத்தேன். அவளுடைய முகத்தை பாலித்தீன் பையை வைத்து மூடி,  சுத்தியால்  தலையில் பலமுறை அடித்தேன்.

ன்ல்

இதில் மால்டசி ரத்த வெள்ளத்தில் மிதந்தார் .  அப்போது அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.   இவை அனைத்தும் என்னுடைய செல்போனில் ரெக்கார்டு செய்யப்பட்டிருக்கிறது.   அதன் பின்னர் மால்டசி உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து இருந்தேன்.   சில நாட்களுக்கு பின்னர் அந்த துண்டுகளை குப்பையில் கொட்டி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .  மால்டசி மீது ஏன் இந்த அளவுக்கு கொலைவெறி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.