காதலிக்கு திருமணம்- புது மாப்பிள்ளையை சரமாரி குத்தி சாய்த்த காதலன்

 
k

 தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சய தார்த்தமும் நடந்து விட்டதால்,  புது மாப்பிள்ளை உடன் போட்டோ எடுக்க போட்டோ ஸ்டூடியோவிற்கு வந்ததால் ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார் காதலன்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டி.  இப்பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மணி.   சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி.  பாண்டி மணியும் பிரியதர்ஷினியும் காதலித்து வந்திருக்கிறார்கள்.  இவர்களின் காதலருக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.   ஆனாலும் தடையை மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

k

 இதனால் பிரியதர்ஷினி உடனே வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து நெற்குப்பையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு பேசி முடித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து விட்டனர்.  நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் திருமண பத்திரிகை,  டிஜிட்டல் பேனர்களளில் போடுவதற்காக புகைப்படம் வேண்டும் என்று பாலமுருகனும், பிரியதர்ஷினியும் அவரது நண்பர்களுடன் ஸ்டூடியோவிற்கு புகைப்படம் எடுக்க சென்றிருக்கிறார்கள்.

 இது தெரிந்ததும் ஆத்திரத்தில் கொதித்திருந்திருக்கிறார் பாண்டி மணி.   அவர் தனது சகோதரர்,  நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்று இருக்கிறார். அப்போது பிரியதர்ஷினியிடமும் பாலமுருகனிடமும்  வாக்குவாதத்தை நடத்தி இருக்கிறார்.  இதில் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.   அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகனையும், அவரது  நண்பர்களையும் சரமாரியாக குத்தி இருக்கிறார்.

 இதில் படுகாயம் அடைந்த மூன்று பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டி முனியையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றார்கள்.