காதலிக்கு திருமணம் - வீடியோ காலில் புலம்பிக்கொண்டே காதலன் தற்கொலை

 
r

 தன்னை மறந்து வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அந்த மன உளைச்சல் தாங்காமல் வீடியோ காலில் பேசி புலம்பிக்கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் வாலிபர்.

 கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரியாஸ்.  திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார்.  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டினால் அவரது மனைவி ரியாசை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக சென்றுவிட்டார்.   இதனால் ரியாஸ் பெங்களூரில் வேலை பார்த்து வந்திருக்கிறார் .  

ர் 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வேலை தேடி வந்திருக்கிறார்.  அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.   திடீரென்று அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்திருக்கிறது.  இதனால்  ரியாஸ் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். 

 முதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற நிலையில் காதலியும் தன்னை விட்டு பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த வேதனையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.   இதையே தனது நண்பருக்கு வீடியோகால் மூலமாக பேசி தனது வேதனையை தெரிவித்திருக்கிறார்.   அதற்கு அந்த நண்பர் ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

ம்ன்

 ஆனாலும் என்னால் இனி வாழ முடியாது நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று சொல்லிக் கொண்டே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார்.   இதை வீடியோ கால் மூலமாக பார்த்த நண்பர் அவரின் எண்ணத்தை மாற்ற எவ்வளவோ சொல்லி பார்த்து இருக்கிறார்.  ஆனால் கொஞ்சம் கூட கேட்காமல் தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார்.

 இதை வீடியோ கால் மூலமாக பார்த்த அவரது நண்பர் மிகவும் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்.   பின்னர் அவர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறார்.   நண்பர் கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு போலீசார் ரியாஸ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.