சாப்பிட வரச்சொல்லி சரமாரியாக வெட்டிக்கொலை - காதலி வீட்டினர் கொடூரம்!

 
ல்ல்

 காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டும் ஓடிச் சென்றுவிட்டார்களே என கடும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் திரும்பவும் வீட்டிற்கு வந்ததும் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள இளைஞரிடம் சமாதானமாக பேசி சாப்பிட வரச் சொல்லி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் .

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பண்டாரா மாவட்டத்தில் தும்சார் பகுதி.   இப்பகுதியைச் சேர்ந்தவர் சச்சின்.   24 வயதான இந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.   இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கிறது.   எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

ப்ப்ன்

 இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சச்சினும் அந்த இளம் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.  இதனால் தங்களது மகளை காணவில்லை என்று பல இடங்களில் தேடி பார்த்து இருக்கிறார்கள் . சச்சினும் காணவில்லை என்பதால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று விட்டார்கள் என்று கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள் பெண்வீட்டார்.

 இந்நிலையில் மூன்று தினங்களுக்கு பின்னர் அந்த இளம்பெண் வீடு திரும்பி வந்திருக்கிறார்.  தங்கள் மகள் தங்கள் வீட்டிற்கு பத்திரமாக திரும்பி வந்துவிட்டார் என்று  சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சச்சினை இனிமேல் விட்டு வைக்கக்கூடாது எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பெண் வீட்டார் ஆவேசத்தில் இருந்திருக்கிறார்கள் .

இதையடுத்து அவர்கள் திட்டம் போட்டு சச்சினை ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வரும்படி அழைத்து இருக்கிறார்கள்.   அதனை நம்பிய சச்சின் அந்த ஓட்டலுக்கு சென்று இருக்கிறார்.   அங்கே நீங்க கேட்டான் ரஞ்சித் , கேத்தன், குல்தீப் ஆகிய 3 பேரும் தயாராக நின்று இருந்திருக்கிறார்கள். 

சச்சின் ஹோட்டலுக்கு சாப்பிட வந்ததும் தயாராக வைத்திருந்த வாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சச்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மூன்று பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.