தனது காதலனை கண்டிக்காமல் மகளை மிரட்டிய தாய் கைது
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பு கீழத் தெருவைச் சேர்ந்த சிறுமிக்கு தாயின் காதலனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாகவும், அதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருப்பதாகவும் 1098 என்கிற எண்ணுக்கு அழைப்பு வந்திருக்கிறது.
இதை அடுத்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் அவரது தாயார் பூபதிக்கும், கூனம் பட்டியைச் சேர்ந்த பாண்டி முருகன் என்பவருக்கும் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கும் பாண்டி முருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் பாண்டி முருகன். பாலியல் தொல்லைகள் எல்லை மீறி போனதால் தனது தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார் சிறுமி. இதைக் கேட்ட தாய் இதைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்லி விடாதே என்று சிறுமியை கண்டித்திருக்கிறார். கையால் அடித்து காயப்படுத்தி இருக்கிறார்.
பாண்டி முருகனைக் கண்டிக்க வேண்டியதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட தன்னையே தாய் கண்டிக்கிறார். பாண்டிமுருகனுக்கு உடந்தையாக இருக்கிறாரே என்று மேலும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார். இதை அறிந்த சிலர் கொடுத்த ஆலோசனையில்தான் 1098 என்ற எண்ணுக்கு பேசியிருக்கிறார் சிறுமி.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஜானகி என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி முருகன், சிறுமியின் பூபதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.