சிறுமியின் உடலில் காயங்களை கண்ட தாய் அதிர்ச்சி! பாதிரியாரின் உண்மை முகம் அம்பலம்

 
r

 சிறுமியின் உடலில் காயங்களை கண்ட தாய் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  உடனே  போலீசில் புகார் அளித்ததால் போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.  ராஜபாளையம் பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் வடக்கு மலையடிபட்டி எம். ஜி. ஆர் நகரில் உள்ளது சர்ச்.   இங்கே பாதிரியாராக ஜோசப் ராஜா என்ற 49 வயது நபர் இருந்து வருகிறார்.   இந்த சர்ச்சுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் தொடர்ந்து வந்து சென்றிருக்கிறார்.   அப்போது மன வளர்ச்சி குன்றிய தனது 14 வயது மகளையும் அழைத்துச் சென்று வந்திருக்கிறார்.  

ர்ர்

  தாயுடன் அந்த சிறுமி வந்து போவதை பாதிரியார் உற்று கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.   திடீரென்று தாய் இல்லாமல் தனியாக வந்த அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.   இதற்கு சிறுமி மறுத்திருக்கிறார்.  ஆனாலும், வலுக்கட்டாயமாக பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். இதனால் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்திருக்கின்றன. 

 மகளின் உடலில் காயங்களை பார்த்து அவரது தாய் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   அது குறித்து மகளிடம் கேட்க , அவர் தனக்கு தெரிந்த வரைக்கும் நடந்ததை சொல்ல,  அதைக் கேட்டு மேலும் அதிர்ந்து போன தாயார்,  உடனே மகளை அழைத்துக் கொண்டு போய் ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

 இந்த புகாரை ஏற்றுக்கொண்ட  இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்திருக்கிறார்.   உடனே அவர் பாதிரியார் ஜோசப் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையான போக்சோ சட்டத்தில் பாதிரியார் ஜோசப் ராஜா கைது செய்யப்பட்டிருப்பது ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.