மகளை கூட்டிச்சென்றதால் ஆத்திரம் - காதலனின் தந்தையை கொலை செய்த காதலியின் தந்தை கைது

 
murderr

மதுரையில் மகளை காதல் திருமணம் செய்துகொண்ட காதலனின் தந்தையை வெட்டிக் கொலை செய்த காதலியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். 
 
மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராமச்சந்திரன் என்பவரது மகன் சிவபிரசாந்த். இவர் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி மகள் சினேகாவை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி நேற்று ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவீட்டாறுக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. 

love marriage

மகளை காதல் திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரத்தில் இருந்த சினேகாவின் தந்தை சடையாண்டி, நேற்று நள்ளிரவு பெரியார் பேருந்து நிலையம்  அருகே வந்து கொண்டிருந்த சிவ பிரசாத் தந்தையான ராமச்சந்திரனை வாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

police

கொலை சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு அதே பகுதியில் தலைமறைவாக இருந்த சடையாண்டியை கைது செய்ததோடு, கொலை செய்ய பயன்படுத்திய வாளை பறிமுதல் செய்தனர். 

arrest

தனது மகளை ராமச்சந்திரனின் மகள் கூட்டிச்சென்றதால் ஏற்பட்ட அத்திரத்தில் ராமச்சந்திரனை கொலை செய்ததாக சடையாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார். மகளை காதல் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை காதலனின் தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.