இரண்டாவது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டம் - சிறை கூட்டாளிகளுடன் சிக்கிய கணவர்

 
p

 இரண்டாவது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் கணவர்.  குழந்தையை முதல் மனைவியின் தங்கைக்கு கொடுக்க  தடையாக இருந்ததால் ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மல்லேஸ்வரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சித்தார்த் உசமணி.   இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள்  உள்ளனர்.   காப்பீடு நிறுவனத்தில் ஊழியராக இருந்தார்.

 இந்த நிலையில் சித்தார்த் விதவைப் பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.   சித்தார்த்துக்கும் அந்த விதைவை பெண்ணுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.   இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையை முதல் மனைவியின் சகோதரிக்கு குழந்தை இல்லை என்பதால் அவருக்கு கொடுத்திருக்கிறார் சித்தார்த்.

j

 இதனால் கொதித்து எழுந்த இரண்டாவது மனைவி,  குழந்தையை கடத்தியதாக கணவர் மீது மல்லேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தார்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இதை அடுத்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சித்தார்த். 

 குழந்தையை முதல் மனைவியின் சகோதரிக்கு கொடுக்க விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை சிறைக்கும் அனுப்பி விட்டதால் ஆத்திரத்தில் இருந்த சித்தார்த்,  இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.   இதற்காக சிறையில் இருந்த ரவுடி பெட்டப்பா உதவியுடன் கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் , யோகேஷ் ஆகியோருக்கு பணம் கொடுத்து இரண்டாவது மனைவியை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

 இதனால் சந்தேகம் அடைந்த இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ரஞ்சித்,  யோகேஷ் , சித்தார்த்தை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.