ஆபாச வீடியோ அவமானம் - இளம்பெண் தற்கொலையில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் பிடிபட்டார்

 
v

காதலித்த பெண் கர்ப்பமாகி விட்டதால் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலனிடம் கேட்க, காதலன் அதற்கு மறுப்பு தெரிவிக்க , பெண் பிடிவாதம் பிடிக்க, உறவு வைத்திருந்த போது  எடுத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டி திருமணத்திற்கு வற்புறுத்தினால் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்ட அந்த இளம் பெண் தற்கொலை செய்து இருக்கிறார்.  இந்த வழக்கில் கடந்த ஒன்பது ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் போலீசில் சிக்கி இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். 29 வயதான இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். 

v

 கடந்த 2013 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் காதலிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்திருக்கிறார் சுல்தான். காதலன் என்பதால் அந்த பெண் சுல்தான் கொடுத்த குளிர்பானத்தை நம்பி குடித்திருக்கிறார்.   குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார்.  அப்பொழுது சுல்தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்.  அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

 திடீரென்று  ஒரு நாள் தான் கர்ப்பமானதை அறிந்திருக்கிறார் அந்த பெண்.  இதை யாரிடமும் சொல்லாமல் சுல்தானிடம் சென்று தான் கர்ப்பமாக உள்ளேன்.  இது மற்றவர்களுக்கு தெரிவதற்கு முன் திருமணம் செய்து கொள் என்று சொல்லி இருக்கிறார்.  அதற்கு மறுத்திருக்கிறார் சுல்தான்.  இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் எல்லோரிடமும் சொல்லி உன்னை  திருமணம் செய்து கொள்ள வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். 

 அதற்கு சுல்தான்,  பலாத்காரம் செய்த போது எடுத்த வீடியோவை காட்டி  மற்றவர்களிடம் இதைப் பற்றி சொன்னால் இந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.   ஆபாச வீடியோ வெளியானால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்து பயந்த அந்த இளம் பெண் ஏப்ரல் 22ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

j

 சம்பவம் குறித்து அறிந்த நாலாச்சோப்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில்  இளம் பெண்ணின் தற்கொலைக்கு காரணம் சுல்தான் என்பதும் தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து போலீசார் சுல்தானை பிடிக்க தேடி வந்தனர்.  ஆனால் போலீஸிடம் சிக்காமல் உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.   நேற்று முன்தினம் அவர் நாலாச்சோப்ரா வரவிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்று சுல்தானை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். 

 ஒன்பது ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த அந்த வாலிபர் பிடிபட்டுள்ளது நாலாச்சோப்ரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.