அந்தரங்க வீடியோ அம்பலம் - சிக்கிய பள்ளி மாணவர்கள்

 
v

கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திமுக வார்டு இளைஞரணி அமைப்பாளர், பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் ரயில் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சேர்த்த  அந்த இருபத்தி இரண்டு வயது இளம்பெண்ணுடன் அதே பகுதியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞர் பழகி வந்திருக்கிறார்.    பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.   

அந்த பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே காதல்போர்வையில் நடித்து வந்துள்ளார் ஹரிஹரன். ஆனால்,  அந்த இளம்பெண் இது தெரியாமல் ஹரிஹரனுடன் உண்மையாக பழகி வந்திருக்கிறார்.  

g

பெத்தனாட்சி நகரில் இருக்கும்  தனக்கு சொந்தமான மருந்து குடோனுக்கு உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார் ஹரிஹரன்.   திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர்தானே என்று அந்த இளம்பெண்ணும் அதற்கு  சம்மதித்துள்ளார்.   ஆனால்,    உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் திட்டமிட்டே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.

 பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  அதுமட்டுமில்லாமல் அந்த ரகசிய வீடியோவே அவரது நண்பர்கள் 18 வயதுக்கு உட்பட்ட நான்கு பள்ளி மாணவர்கள் மற்றும் வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜீனத் அகமது(27), பிரவீன்(22),  மாடசாமி(37) ஆகியோருக்கும் அந்த வீடியோவை அனுப்பியிருக்கிறார்.

 அவர்களும் அந்த பெண்ணை  வீடியோவை காட்டிமிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  தொடர்ந்து இப்படி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வரவும்,   பாதிக்கப்பட்ட அந்த பெண் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் பெண்ணின் காதலன் ஹரிகரன் , திமுக பிரமுகர் ஜுனைத் அகமது,  பிரதவீன் , மாடசாமி மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.