காதலனுடன் கஞ்சா புகைத்த பெண் சடலமாக மீட்பு
காதலனுடன் சேர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலியல் தொழிலாளியான அந்தப் பெண் மரணத்தில் பாலியல் தொழிலாளி ஏஜெண்ட் ஜோதி, மற்றும் பிரியாவின் காதலன் போலீசில் சிக்கி இருக்கின்றார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால். இப்பகுதியில் நேற்றிரவு 23 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது . மீட்பின்போது அந்த இளம் பெண்ணின் உடல் அருகே பணப்பை இருந்தது தெரியவந்தது . அதை வைத்து மேலும் கிடைத்த தடயங்களை வைத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சடலமாக கிடந்த அந்த இளம்பெண் காவேரிப்பாக்கத்தில் சேர்ந்த பிரியா என்பதும் அவர் பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. வல்லம் வடகால் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாகவும், அதனால் தொடர்ந்து குற்றங்கள் அப்பகுதியில் அதிகரித்திருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது.
கஞ்சாவுக்கு அடிமையான பிரியாவும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் காதலன் வெங்கடேசனும் அங்கே கஞ்சா புகைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பிரியாவிடம் கிடைத்த தடயத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலியல்தொழில் பெண் ஏஜென்ட் ஜோதி சிக்கியிருதிக்கிறார்.
உயிரிழந்த பெண்ணின் காதலனன் வெங்கடேசனும் போலீசில் சிக்கி இருக்கிறார். இவர்கள் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பிரபல ஓட்டல்களில் தங்கி இருந்து பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார் ஜோதி. பிரியாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா, காதலன் வெங்கடேசன் உடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
பிரியா, வெங்கடேசன் இருவருமே கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்பதால் கஞ்சா புகைத்து கொண்டிருந்திருக்கிறார்கள். அதன்பின்னர் பிரியா அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? எப்படி கொலை செய்யப்பட்டார் ? ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தொடர்ந்து ஜோதியிடமும் வெங்கடேசனிடமும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.