வீட்டில் தனியாக பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை

 
உ

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

 திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை சிங்கப்பூர் நகர் பகுதியில் பத்ரகாளியம்மன் லேஅவுட் ஏரியா.   இங்கு வசித்து வருபவர் சண்முகம்.  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சண்முகத்தின் மகள் உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  

 தந்தையும், தாயும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்,  நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  மாணவியின் தாயார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற வாசல் அருகே மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

ழ்ட்ட்ட்

 அலறியடித்துக்கொண்டு மகளை தூக்கி எடுத்து பார்த்து இருக்கிறார்.  அசைவற்று  கிடந்திருக்கிறார் என்பது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது.  ஆனாலும் மகளை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.   அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,  உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என்று தெரிவித்திருந்தனர் .  

வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் இது கொலையா தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.