உன் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்பு! உயரதிகாரியின் டார்ச்சரால் மின் ஊழியர் தீக்குளிப்பு
டிரான்ஸ்பர் ஆர்டர் வேண்டுமென்றால் உன் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்பு என்று உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சரால் மின்துறை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்கிம்பூர் கேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கோகுல் பிரசாத் என்கிற 45 வயது வாலிபர் மின்சாரத்துறையில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் என்ஜினியர் அலுவலகத்திற்கு வெளியே தன் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து இருக்கிறார். இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கோகுல் பிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பான போலீஸ் விசாரணையில் ஜூனியர் என்ஜினீயர் நாகேந்திர குமார், எழுத்தர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் மின்சாரத்துறை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.
உயிரிழப்புக்கு முன்பாக லைன்மேன் கோகுல் பிரசாத் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுக்க வேண்டுமென்றால் உன் மனைவியை ஒரு இரவு அனுப்பு என்று அதிகாரி டார்ச்சர் கொடுத்ததாகவும், அதனால்தான் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.
தன்னை இந்த நிலைமைக்கு தள்ளியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட வைத்துக்கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்தபோது அவர் இந்த வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.