சிறுமியின் ஆடைக்குள் உயிருள்ள ஆற்று நண்டை விட்டு பாலியல் சீண்டல்
சிறுமியின் ஆடைக்குள் உயிருள்ள ஆற்று நண்டை விட்டு பாலியல் சீண்டலில் டூடுபட்ட இளைஞரை உறவினர்களும் ஊர் மக்களும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் அடுத்த தமிழக எல்லையை ஒட்டிய பகுதி. 14 வயது சிறுமி பெற்றோருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பெற்றோரும் உறவினர்களும் வீட்டுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதும் சிறுமி மட்டும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த 23 வயது இளைஞர் மைக்கேல் அந்த சிறுமியின் தொடையின் மேல் உயிருள்ள நண்டை விட்டிருக்கிறார். இதில் சிறுமி அலறி துடித்திருக்கிறார். பின்னர் அந்த சிறுமியின் கைகளை பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார் மைக்கேல். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி துடித்திருக்கிறார்.
இதற்குள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அந்த இளைஞரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் காரைக்கால் நகர போலீசில் த்கவல் சொல்லி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், ஒப்படைத்துள்ளனர். போலீசார் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.