இளிச்சவாய் கணவர்! தன்னைக் கொல்ல கூலிப்படை ஏவிய மனைவியை காப்பாற்ற போலீசிடம் கதறல்

 
ல்

தன்னை கொல்ல மனைவி ஏவிய கூலிப்படையிடமிருந்து உயிர் தப்பிய  கணவர் மனைவியை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று போலீஸிடம் கதறி இருக்கிறார்.  அந்த இளிச்சவாய் கணவரை பார்த்து போலீசார் திகைத்து போய் நின்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தோடபிட்டரகல்லு என்கிற பகுதியைச் சேர்ந்தவர் அனுபல்லவி.   இவரது கணவர் நவீன் குமார்.   இவர் சொந்தமாக மாவு மில் வைத்து நடத்தி வந்திருக்கிறார்.  அனு பல்லவிக்கு கணவன் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறது.  அவருக்கு  ஹேமந்த் குமார் என்பவர் உடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  இந்த கள்ள உறவு கணவர் நவீன் குமாருக்கு தெரிய வந்ததும்,    கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலனுடன் தொடர்ந்து வாழ முடியாது என்று நினைத்து கணவரின் கதையை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். 

க்க்க்

 இதற்காக தனது தாய் அம்மோஜம்மாவுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்.   முகிலன், ஹரீஷ், நாகராஜ் ஆகியோரை கணவரை கொல்ல ஏவி இருக்கிறார்கள். கணவரை கொல்வதற்காக முகிலன், ஹரிஷ், நாகராஜ் ஆகியோருக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலை பேசி இருக்கிறார்.  முன்பணமாக 90 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார் கதையை முடித்ததும் மிச்சம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தந்து விடுவதாக சொல்லி இருக்கிறார்.

 இதை அடுத்து திட்டமிட்டபடி நவீன்குமாரை கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று முகிலன், நாகராஜ், ஹரிஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கடத்தி இருக்கிறார்கள். அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தங்க வைத்திருந்தார்கள்.   ஆனால் அவரை கொல்லாமல் அவருடனே சேர்ந்து குடித்து கும்மாளம் அடித்து வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் போதை மயக்கத்தில் படுத்து கிடந்த நவீன் குமார் மீது கெட்சப் ஊற்றி, அவரை கத்தியால் சமாரியாக குத்தி கொன்று விட்டது போல் போட்டோ எடுத்து அனுபல்லவியின் கள்ளக்காதலன் ஹேமந்த் குமாருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் குமார் பயந்து போய்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 இதற்கிடையில் தனது அண்ணனை காணவில்லை என்று நவீன் குமார் சகோதரி கடந்த இரண்டாம் தேதி என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  போலீசார் நவீன் குமார் தேடி வந்த நிலையில்,   ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று நவீன் குமார் தானாகவே வீட்டிற்கு சென்றிருக்கிறார் .  அப்போது நவீன் இடம் போலீசார் விசாரணை நடத்தியதுபோது,  நடந்ததை சொல்லி இருக்கிறார்.  முகிலன், நாகராஜ் ,ஹரிஷ் ஆகிய மூன்று பேரும் எதற்காக நவீன் குமாரை கடத்த வேண்டும் என்று துருவித் துருவி விசாரித்ததில்,  அணுபல்லவியும் அவரது தாயாகவும் சிக்கியிருக்கிறார்கள்.  

 இருரையும் கைது செய்து போலீசார் அழைத்துச் சென்ற போது மாமியாரை சிறைக்கு அனுப்புங்கள்.  ஆனால் நான் மனைவியின் மீது ரொம்ப பாசம் வைத்திருக்கிறேன். அவரை மட்டும் விட்டு விடுங்கள் என்று கதறி இருக்கிறார் நவீன்குமார்.  இப்படியும் ஒரு இளிச்சவாய் கணவரா என்று போலீசார் திகைத்து போய் நின்றிருக்கிறார்கள்.