சகோதரிகள் பலாத்காரம் - நண்பர்கள் போக்சோவில் கைது

 
பொ

சகோதரிகளை கடத்தி வாடகை வீடு எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.  அவர்களுக்கு உடந்தையாக இருந்தவரும் போலீஸில் சிக்கி இருக்கிறார்.  

 கடலூரைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது வரை உடைய சகோதரிகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு,  பிளஸ்- 1 படித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவரும் கடந்த 4-ந் தேதியன்று வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார்கள்.   அதை அடுத்து கடலூர் துறைமுகம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

சு

 இந்த நிலையில் நேற்று கடலூர் பேருந்து நிலையத்தில் சிறுமிகள் இருவரும் நிற்பதாக துறைமுகம் போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.   இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டுள்ளனர்.   அவர்களிடம் நடத்திய விசாரணையில்,   கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ராஜசேகர், செந்தில்குமார் ஆகியோர் தங்களை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்றதும்,  அங்கு திருமணம் செய்து வாடகை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததையும் சொல்லியிருக்கிறார்கள் .

இதையடுத்து போலீசார் சிறுமிகளை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் .  கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ராஜசேகர், செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.  அவர்களுக்கு உடந்தையாக இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.