நடுத்தர வயது ஆண்களின் வினோதமான பாலியல் மோகம்! அறுவை சிகிச்சையில் உயிர்பிழைத்த ஆண்

 
me

நடுத்தர வயது ஆண்கள் பாலியல் மோகத்தால் அதிகளவு தூண்டப்பட்டு வினோதமாக எதையாவது செய்து விபரீதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று டாக்டர்கள்தெரிவித்திருக்கிறார்கள்.   அப்படித்தான் 54 வயதுடைய ஒரு ஆணின் விபரீதத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள்.  

 பிரேசில் நாட்டைச் சேர்ந்த 54 வயதான ஆண் மனாஸ் நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.   தன்னால் மலம் கழிக்க முடியவில்லை . குமட்டல், வாந்தி அதிகமாக இருக்கிறது என்று மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார்.  சாதாரண வயிற்றுப் பிரச்சனை ஆகத்தான் இருக்கும் என்று நினைத்து மருத்துவர் அவருக்கு சில மருந்துகளைப் பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.

bo

 பின்னர் இரண்டு நாள் கழித்து வந்த அந்த ஆண்,  மீண்டும் அதே பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.  இதில் கொஞ்சம் யோசித்த மருத்துவர் அப்படியென்றால் வயிற்றை ஸ்கேன் செய்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.   அதற்கு அந்த ஆண் ஒப்புக்கொள்ளவில்லை.   ஸ்கேன் செய்வதற்கு எதற்கு மறுக்கிறீர்கள் என்று கேட்கும் போதே ,  டாக்டருக்கு புரிந்து இருக்கிறது.

 அவர் எதையோ மறைக்கிறார் என்று புரிந்திருக்கிறது. அதனால் பிடிவாதமாக ஸ்கேன் எடுத்தே ஆகவேண்டும் என்று சொல்லி வற்புறுத்த ஸ்கேன் எடுக்க வைத்திருக்கிறார்கள் அதிர்ந்து போயிருக்கிறார் மலக்குடல் பகுதியில் இரண்டு கிலோ எடை உள்ள 20 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி இருந்திருக்கிறது .

 இதையடுத்து அறுவை சிகிச்சை கம்பியை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர்.   சாமர்த்தியமாக செயல்பட்டு டாக்டர்கள் அந்த இரும்புக் கம்பியை ஒரு வழியாக வெளியே எடுத்து இருக்கிறார்கள்.   பின்னர் மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அந்த ஆண் வீடு திரும்பியிருக்கிறார்.  

 அப்போதுதான் சுய இன்பத்திற்காக இப்படியொரு விபரீதமான செயலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்து இருக்கிறது.   ஆகவே தான் டாக்டர் அதுகுறித்து நடுத்தர வயதுடைய ஆண்கள் பாலியல் மோகத்தால் அதிக அளவு தூண்டப்பட்டு வருகிறார்கள் வினோதமாக எதையாவது செய்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.  அவர் மேலும்,   அலட்சியமான ஆபத்தான பாலியல் சீண்டல் ஆசை உயிருக்கே ஒருவிதமாக முடிந்து விடுகிறது.  

அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் கண்ணாடி, இரும்பு,  பிளாஸ்டிக் பொருட்களை வைத்து உடல் நலத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  ஐந்து நிமிட அற்ப சுகத்திற்காக தங்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு உயிரையும் இழக்கத் தயாராகி விடுகிறார்கள் என்று டாக்டர் கவலை தெரிவித்திருக்கிறார்.