கல்லூரி வாசலில் மாணவர் சரமாரி குத்திக்கொலை
கல்லூரி மாணவர் நடுரோட்டில் பட்டப்பகலில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லூரி விழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு கேஜி ஹள்ளி அருகே வசித்து வந்தவர் அர்பாஸ். 17 வயதான அந்த சிறுவர் அதே பகுதியில் இருந்த தனியார் கல்லூரியில் பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரியில் இருந்த அர்பாஸை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள் இதை அடுத்து அவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது கல்லூரி அருகே வைத்து மர்ம நபர்கள் அப்பாஸை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.
கல்லூரி வாசலில் சாலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்து கிடந்த மாணவர் அர்பாஸ் குறித்த தகவல் அறியும் கே. ஜி. ஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். மாணவர் அர்பாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் பின்னர் மாணவர் கொலைக்கான காரணங்கள் அறிய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது அர்பாஸ் மற்றும் சில மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது .
இதனால் கல்லூரி விழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அர்பாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.