சிகிச்சியின் போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் - நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 
pp

 சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியாடு தொல்லை கொடுத்த 70 வயது டாக்டர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி  முன்னிலையில் ஆஜர்படுத்திய போது திடீரென  மயங்கி விழுந்திருக்கிறார். இதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

cc

 ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லாகான்.  70 வயதான இந்த முதியவர் டாக்டர்.  பாரதி நகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.   டாக்டர் ஜபருல்லாகான் கிளினிக்கிற்கு 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.   அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த போது டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

 இதை மாணவி தன் தாயாரிடம் சொல்லி இருக்கிறார்.   இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார்,   உடனே தன் மகளை அழைத்துக் கொண்டு போய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜபருல்லா கானை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.  அப்போது டாக்டர் ஜபருல்லாகான் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்திருக்கிறார்.  இதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   நீதிபதி அவரை போலீஸ்காவலில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.