சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டு நண்பனின் கள்ளக்காதலியுடன் சேரத்துடித்த டிரைவர்!சரமாரி கத்திக்குத்து

 
ம்

கருத்து வேறுபாட்டினால் பிரிந்திருந்த நண்பனின் கள்ளக்காதலியே சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் சேர துடித்ததால் ஆத்திரப்பட்ட நண்பன் சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில்  சாய்த்திருக்கிறார்.

 சென்னையில் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்.  ஐம்பது வயதாகும் இவரது நண்பர் ராமச்சந்திரன்.  34 வயதாகும் ராமச்சந்திரன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  அதே நிறுவனத்தில் 35 வயது பெண்ணும் வேலை செய்து வருகிறார்.

க்

 ராமச்சந்திரனுக்கும் அந்த பெண்ணுக்கும் அதிகம் பழக்கம் இருந்திருக்கிறது.   அந்த பெண் திருமணமானவர் என்று தெரிந்தும் ராமச்சந்திரன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.   இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர் .  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாட்டினால் பிரிந்து உள்ளனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமச்சந்திரன் நண்பர் சுப்பிரமணியனிடம் சொல்லி புலம்பி இருக்கிறார்.

 கார் ஓட்டுனர் ஆன சுப்பிரமணியன் அந்த பெண்ணை எப்படியும் உன்னிடம் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி தினமும் பேசி வந்திருக்கிறார்.   சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணுடன் சேர துடிக்கும் ஆசையில் சுப்பிரமணியன் அதிக நேரம் நாள்தோறும் பேசி வந்திருக்கிறார்.  இதை பார்த்து மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் ராமச்சந்திரன்.

 இந்த நிலையில் சுப்ரமணியனை மது அருந்தலாம் என்று அழைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.  இருவரும் சேர்ந்து மது அருந்திய போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  சுப்பிரமணியனை சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்திக்கிறார்.  அதன்பின்னர் தப்பி ஓடி இருக்கிறார் .

சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதால் போலீசார் ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.