ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியின் உடல் முழுவதும் கத்தியால் கீறி, சிகரெட்டால் சூடு - கொடூரனுக்கு 44 ஆண்டுகள் சிறை

 
ட்

 ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கத்தியால் கீறி கொடுமைப்படுத்திய கொடூரனுக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.

 சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்.  இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்திருக்கிறார்.   பின்னர் அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார் .  தினமும் மது குடித்துவிட்டு வரும் கருணாகரன் சிறுமியின் மீது சந்தேகம் அடைந்து அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.   

இதனால் கருணாகரனின் ஆசைக்கு இணங்க மறுத்து இருக்க வந்திருக்கிறார் சிறுமி.   இதில் ஆத்திரமடைந்த கருணாகரன் தினமும் சிகரெட்டால் சிறுமியின் உடல் முழுவதும் சூடு வைத்து கத்தியால் கீறி காயப்படுத்தியும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.  சிறுமிக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுத்து வந்திருக்கிறார்.

ச்

 ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் தன் தாயிடம் இதைச் சொல்லி சிறுமி அழுதிருக்கிறார்.  உடனே தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க,  கருணாகரன் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 

 அப்போது கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.   இதையடுத்து கருணாகரனுக்கு மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனையும் 36 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி ராஜலட்சுமி.

 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும்,  கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் , கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்,   குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு சிறை தண்டனையும்,  ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக ஏழு ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது .

இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அவர் அனுபவிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்.   பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டிருக்கிறார்.