சிறுமியின் வாயை பொத்தி பொதுக் கழிப்பறைக்கு தூக்கிச்சென்று...

 
சி

 விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி பொதுக் கழிப்பறை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றபோது சிறுமி போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வர தப்பி ஓடியிருக்கிறார் அந்த இளைஞர்.   ஆனாலும் வளைத்து பிடித்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 சென்னை வியாசர்பாடி சி கல்யாணபுரம் பகுதி ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன்.   23 வயதான இந்த இளைஞர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை திடீரென்று வாயைப் பொத்தி தூக்கிச் சென்றிருக்கிறார்.   அந்த பகுதியில் இருந்த பொது கழிப்பறை சிறுமியைத் தூக்கிச் சென்று கதவை சாத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.

ஜ்

 அப்போது சிறுமி போட்ட அலறல் சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடி வர அதை கவனித்து விட்ட மணிமாறன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.   இதன் பின்னர் அப்பகுதியினர் திரண்டு சென்று எம். கே. பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க,  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட மணிமாறனை போலீசார் தேடிவந்தனர்.

 இந்த நிலையில் மணிமாறன் நேற்று வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்ததும் போலீசார் திடீரென்று வீட்டை சுற்றிவளைத்து மணிமாறனை கைது செய்து  போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.