காதலிக்க மறுத்ததால் சிறுமியை 10 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்! இளைஞருக்கு உடந்தையாக இருந்த தாய்

 
g

17 வயது சிறுமியை முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் அடைத்து வைத்து பத்து நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் கூலித் தொழிலாளி.  அந்த இளைஞருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசில் சிக்கி இருக்கிறார்.

j

 அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த இலையூர் கண்டியம் கொள்ளை கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார்.  மூன்று வருடமாக வற்புறுத்தி வந்தும் அந்த சிறுமி காதலிக்க மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.  இதனால் சிறுமியை பழிவாங்க வேண்டும் என்று துடித்திருக்கிறார். 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்தி வந்து முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்.  கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  இந்த கடத்தலுக்கு ஜெயக்குமாரின் தாய் சாந்தி உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதுதான்  கொடுமை.

 சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் விசாரணை நடத்தி  வந்த நிலையில் அதை தெரிந்து ஜெயக்குமார் தலைமறைவாகி இருக்கிறார்.

சிறுமியை மீட்ட போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின்படி ஜெயக்குமார் அவரது தாய் சாந்தி மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.