சிறுவனை வன்கொடுமை செய்து எய்ட்ஸ் பரப்பிய பெண்! அதற்கு சொன்ன காரணம்!

 
சி

 தன் கணவரின் அண்ணன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அக்குடும்பத்தில் இருந்த 15 வயது சிறுவனை மிரட்டி இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் எய்ட்ஸ் பாதித்த இளம்பெண் .  இதனால் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிலிபித் பகுதி.  இப்பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் கணவருக்கு எயிட்ஸ் தொற்று பாதித்துள்ளது.  இதனால் அவர் உயிரிழந்துள்ளார்.    கணவரின் மூலமாக அந்த இளம் பெண்ணுக்கும் எய்ட்ஸ் தொற்று பரவியதால் அவரும் அந்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

க்

 இந்த நிலையில் ஏனோ அண்ணன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று அவர் மனதில் முடிவு செய்திருக்கிறார்.   துக்க நிகழ்வுக்கு வந்த அண்ணன் குடும்பத்தில் இருந்த 15 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த இளம்பெண்.   அதன் பின்னர்  கணவரின் அண்ணன் குடும்பத்தின் கிராமத்திற்கே சென்று அங்கேயும் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

 இதன் பின்னர் அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறியிருக்கிறார்.   அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையை அடுத்து,  அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போதுதான் தன் கணவரின் அண்ணன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த சிறுவனை வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கூறியிருக்கிறார்.

 இதையடுத்து அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .  பெரியவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சிறுவனுக்கு அநியாயமாக செய்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.