பலரின் முன்னிலையில் மனைவியை நிர்வாணமாக அருவியில் குளிக்க வைத்த கணவர்
குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக பலரின் முன்னிலையில் மனைவியை நிர்வாணமாக அருவியில் குளிக்க வைத்திருக்கிறார் கணவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் நடந்திருக்கிறது இந்த அவலம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியில் வசித்து வந்த அந்த தம்பதிக்கு திருணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வரத்திற்காக அவர்கள் பல மருத்துவர்களிடம் சென்றும் பிரயோசனம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், மௌலானா பாபா ஜமாதர் என்கிற மாந்திரீகரிடம் சென்று பரிகாரம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த மாந்திரீகர், குழந்தை வரம் வேண்டும் என்றால், அதுவும் ஆண் குழந்தை வரம் கிடைக்க நான் சொல்லும் அருவியில் உன் மனைவி நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
கோவில் கோவிலாக சென்றும், மருத்துவமனை எல்லாம் சென்றும் குழந்தை இல்லாததால் அந்த மாந்திரீகரின் வழியை பின்பற்றுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் கணவர்.
மாந்திரீகர் மௌலானா பாபா ஜமாதர் சொன்ன அந்த அருவியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வைக்க ராய்காட் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அந்த அருவில் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள அருவி. அதனால் அந்த அருவியில் நிர்வாணமாக குளிக்க தயங்கி இருக்கிறார் அந்தபெண். ஆனால் கணவர் அவரை மிரட்டி குளிக்க வைத்திருக்கிறார். பலரின் முன்னிலையில் அருவியில் நிர்வாணமாக குளித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரையும், மாந்திரீகர் மௌலானா பாபா ஜமாதரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.