சிறுவர்களை அடிக்கடி அறைக்குள் அழைத்துச்செல்லும் முதியவர்

 
ச்

 சிறுவர்களை அடிக்கடி தன் வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.   ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்ததை அடுத்து முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அடுத்த பாலோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்.   முதியவரான இந்த பிரேம்குமார் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.    அடிக்கடி இவர் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அழைத்துச் சென்று வந்திருக்கிறார். சிறுவர்கள் என்பதால் அவரும் முதியவர் ,  அதுவும் ஆண் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. 

ச்க்ஷ்

 சிறுவர்களை அழைத்து சென்று ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.   இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவன் தனது பெற்றோரிடம் பிரேம்குமாரைப் பற்றி சொல்ல,  அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதியவர் பிரேம்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர் .

விசாரணையில் முதியவர் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்துள்ளனர்.   ஆபாச படத்தை காட்டி சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவந்த முதியவரின் செயல் திருவனந்தபுரம் மற்றும் பாலோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.