தனியாக இருந்த மூதாட்டிக்கு வாலிபரால் நேர்ந்த கதி

 
t

 வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டிக்கு வாலிபரால் நேர்ந்த கதி உடுமலை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .  திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அடுத்த திருமூர்த்தி நகர்.   இப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் தேங்காய் மண்டியில் கூலிவேலை செய்து வருகிறார்.

 கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக குடிபோதையில் இருந்த ரமேஷ் அதே பகுதியில் வசித்து வரும்  புவன லட்சுமி என்கிற 72 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அங்கே தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

th

 இது குறித்து அறிந்து அக்கம்பக்கத்தினர் மூதாட்டி புவன லட்சுமியை உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  மூதாட்டி நிலைமையை அறிந்த அரசு மருத்துவர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்திருக்கிறார்.

 இதையடுத்து புகாரின்பேரில் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.   இதன்பின்னர் ரமேசை கைது செய்து உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.