உன் டிரஸ்சை கழற்று என வீடியோ காலில் மாணவிக்கு தொல்லை தந்த மாணவர்
வீடியோ காலையில் பேசிய அந்த கல்லூரி மாணவர் ஆடைகளை கழற்ற சொன்னதால் அதிர்ந்து போய் இருக்கிறார். போலீசில் புகார் அளிக்கவும் அந்த மாணவனின் செல்போனில் ஆய்வு செய்ய போது நிறைய பெண்களுடன் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
சென்னையில் திருவொற்றியூர் எஸ்பி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பரத்(வயது19). இந்த இளைஞர் ஆர்கே நகர் கல்லூரியில் பி. ஏ. படித்து வருகிறார். இந்த மாணவருக்கும் பாரிமுனை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இருவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். இருவரும் செல்போன்களை பரிமாறிக் கொண்டு வாட்ஸ் அப் காலில் பேசி வந்திருக்கிறார்கள். கடந்த 15 ஆம் தேதி அன்று இரவு திடீரென்று அந்த மாணவிக்கு போன் செய்த பரத், வழக்கம் போல் அல்லாமல் ஆபாசமாக பேசி இருக்கிறார் . இதை கேட்டதும் அந்த மாணவி அதிர்ந்து போய் இருக்கிறார்.
உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா என்று கேட்டிருக்கிறார் பரத். யாரும் இல்லை என்று சொன்னதும், உன் டிரஸ்சை கழட்டு என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி உடனே வாட்ஸ் அப் கால் வீடியோ இணைப்பைத் துண்டித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப் காலில் வந்து தொல்லை செய்திருக்கிறார்.
இதற்கு மேலும் விட்டால் ஆபத்து என்று நினைத்து அந்த மாணவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்துள்ளனர். பரத்தின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் பல பெண்களிடம் இது போல் வீடியோ காலில் ஆபாசமாக பேசியது ஆபாச சாட்டிங் செய்தது தெரிய வந்திருக்கிறது
இதையடுத்து பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.