கள்ளக்காதலியின் பெண் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரன்

 
kஎ

கள்ளக்காதலி திடீரென்று அறையை விட்டு வெளியே சென்றுவிட்டதால் ஆத்திரத்தில் அறையில் படுத்து இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தையை விடுதியின் அறையில் பாத்ரூமில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் கள்ளக்காதலன்.  இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  கேரள மாநிலத்தில் அங்கமாலி பரக்கடவு பகுதி.   பகுதியை சேர்ந்தவர்  சிக்ஸி.   இவருக்கு ஒன்றரை வயதில் சஜூஷ் என்கிற பெண் குழந்தை இருந்தது.  சித்ஸிக்கு பினோய் என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. 

 இதையடுத்து இருவரும் உல்லாசமாக இருப்பதற்காக கொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கணவன்- மனைவி என்று சொல்லி அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.   அப்போது விடுதியின் அறையில் இருக்கும்போது சிக்ஸிக்கும் பினோய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரப்பட்டு கொண்டு சிக்ஸி திடீரென்று அறையை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.    இதனால் சிக்ஸியின் மேல் இருந்த கோபத்தை ஒன்றரை வயது பிஞ்சு பெண் குழந்தையிடம் காட்டியிருக்கிறான்.

கெ

 பாத்ரூமில் இருந்த வாலி தண்ணீரில் அந்த பச்சிளம் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்திருக்கிறான்.   பின்னர் குழந்தையை கொண்டு வந்து கட்டிலில் போட்டு இருக்கிறான்.

 நீண்ட நேரம் கழித்து வெளியே சென்றிருந்த சிக்ஸி அறைக்கு வந்து பார்த்தபோது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது .  உண்மை நிலையை தெரிந்து கொண்ட சிக்ஸி ,   பெரிய சொன்னால் இருவருமே மாற்றிக் கொள்வோம் என்று குழந்தைக்கு வாந்தி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக விடுதி ஊழியர்கள் சொல்லி விட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

  பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  சிக்ஸி -பினோய் இருவரின் செய்கையில் சந்தேகம் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   உடனே போலீசார் வந்து இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.  

 குழந்தைக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர்,  தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் பினோய்.    கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.