சந்தேகப்பட்ட கணவனுக்கு கத்தரிக்கோலால் தண்டனை கொடுத்த மனைவி
நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் பெண் டெய்லர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். வினோத் குமாரின் மனைவி லட்சுமி. இவர் தையல் தொழிலாளர் . வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து துணி தைத்து கொடுத்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு வினோத்குமார் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் அப்படித்தான் மகாலட்சுமி மீது சந்தேகம் கொண்டு வினோத்குமார் வாக்குவாதம் செய்ய இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி இருக்கிறது.
அப்போது ஆத்திரத்தில் தையல் மெஷின் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து கணவன் வினோத்குமாரை சரமாரியாக குத்தி இருக்கிறார் மகாலட்சுமி. வினோத் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருக்கிறார்கள்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து உள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். முயற்சிகளை செய்து வருகின்றனர் போலீசார்.