தலை துண்டித்து வாலிபர் கொலை - கள்ள உறவை கைவிடாததால் நேர்ந்த கதி

 
u

இனி என் மனைவியுடன் பழகுவதை விட்டு விடு என்று அப்பெண்ணின் கணவர் எத்தனையோ முறை கண்டித்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் கள்ள உறவை தொடர்ந்து வந்த நிலையில், அந்த வாலிபர் தலையைத் துண்டித்து சடலமாக மீட்கப் பட்டு இருக்கிறார் .

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி குளம் பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டும் கிடந்து இருக்கிறது. அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் .  தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருக்கிறார்கள் . அங்கே அந்த உடலின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது உடல் கிடந்த சிறிது தூரத்தில் தலை தனியாக வீசப்பட்டு கிடந்து இருக்கிறது. 

k

 உடல் , தலை இரண்டையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.  அதன் பின்னர் கொலை செய்யப்பட்டது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார்கள்.

 போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பது  தெரியவந்திருக்கிறது .   வெளியூரில் வேலை செய்து வந்த துரை, திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்து இருக்கிறார்.   இந்த நிலையில் தான் மறுநாள் காலையில் தலை  துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். 

 இது குறித்து போலீசார் மேற்கொண்டு நடத்திய  விசாரணையில் இன்னொருவரின் மனைவிக்கும் துரைக்கும் கள்ள உறவு இருந்து வந்தது.  பெண்ணின் கணவர் 
இனி என் மனைவியுடன் கள்ள உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.  ஆனால் அத பெரிதாக எடுத்துக் கொள்ளாத துரை,  தொடர்ந்து அப்பெண்ணுடன் கள்ள உறவை வளர்த்து வந்திருக்கிறார். 

 இந்த நிலையில் தலை வேறு உடல் வேறாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார் துரை.  இதனால்தான் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.