இதற்காகவே தனியாக வீடு எடுத்து உல்லாசம்! அதை கெடுக்க நினைத்த மனைவி கழுத்தறுத்துக்கொலை

 
kn

கள்ளக்காதலி உடன் உல்லாசம் அனுபவிக்க விடாமல் தடுக்க மனைவியை அரிவாள் மனையால்  வெட்டி கொலை செய்து இருக்கிறார் கணவர்.  அவராகவே போலீசில் சரணடைந்திருக்கிறார் .

தேனி மாவட்டத்தில் கண்டமனூர் அடுத்த குப்பி நயக்கன்பட்டி.   இப்பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். தச்சு தொழில்  செய்து வருகிறார்.   இவரது மனைவி ராஜாத்தி.  தம்பதிக்கு இரண்டு பெண்கள் பிள்ளைகள் ஒரு மகன்.

ra

  58 வயதாகும் லட்சுமணனுக்கு தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 49 வயது உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. தேனியில் இதற்காகவே தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள்.    இந்த விவகாரம் ராஜாத்திக்கு தெரிய வர கணவருடன் இது குறித்து கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.

நான்  அப்படித்தான் செய்வேன் என்று  லட்சுமணன் சொன்னதால்,  ராஜாத்தி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் புகார் அளித்திருகிறார்.  கடந்த மாதம் இறுதியில் லட்சுமணன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.  போலீசார் விசாரணை நடத்தி நேற்று அவரது கள்ளக்காதல்யுடன் லட்சுமணனை தேனீ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்க வருமாறு கூறி இருந்திருக்கிறார்கள்.

 இதனால் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு மனைவி ராஜாத்தியிடம் கேட்டிருக்கிறார் லட்சுமணன்.   அதற்கு ராஜாத்தி ஒத்துக் கொள்ளாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் அரிவாளை  எடுத்து கழுத்தை அறுத்தருக்கிறார் அதன் பின்னர் சேலையை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.   இதன் பின்னர் கண்டமனூர் போலீசில் அவராகவே சென்று சரணடைந்ததுள்ளார்.  

 ராஜாத்தி உடலை  தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.