மருமகளை கோமியம் குடிக்கச் சொல்லி சித்திரவதை - மாமியார், கணவருக்கு சிறை

 
கொ

வரதட்சணை கொடுமையின் உச்சமாக மருமகளை கோமியம் குடிக்கச் சொல்லி சித்திரவதை செய்ததால் மருமகள் தற்கொலை செய்து கொள்ள மாமியாருக்கும்  கணவருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது .   

சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த மரியானாவுக்கும்,  மனநல மருத்துவராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியாவிற்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது.   2007ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.   அதன் பின்னர் மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்டு அமலியிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.

சொ

 கணவரும் , மாமியாரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரிடம் தொந்தரவு செய்து வந்துள்ள நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டின் கழிவறையில் அமலி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   இந்த  தற்கொலை வழக்கை விசாரித்து வந்த போலீசார்,   கணவர் மரியானோ,  மாமியார் அல்போன்சா மற்றும் மாமனார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

 போலீசாரின் விசாரணையில் மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததை ஒப்புக்கொண்டனர்.   மேலும் இரண்டாவது குழந்தை பிறக்க வில்லை என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தி மாட்டு கோமியத்தினை குடிக்க வைத்து சித்திரவதை செய்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.   இதன் பின்னர் மகளிர் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தினர் போலீஸார்.

hr

விசாரணைக்கு பின்னர் நீதிபதி,   மரியானா மற்றும் மாமியார் அல்போன்சா ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.   மாமனாரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார் .

இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானா மற்றும் அவருடைய அல்போன்சா இரண்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.   வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.   இந்த வழக்கில் டாக்டர் அமலி தற்கொலை செய்து கொள்ள மாமியாரும் கணவரும் காரணமாக இருப்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது .  அதனால் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று சொல்லி இந்த வழக்கை தள்ளுபடி செய்து மரியானா அல்போன்சா இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து இருக்கிறார்.

 வரதட்சனை கொடுமையால் டாக்டர் தற்கொலை செய்து கொள்ள,  7 ஆண்டுகளுக்கு பின்னர் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.