காதலியின் மகன் துடிதுடித்து இறந்ததை மடியில் போட்டு ரசித்த கொடூரன்

 
ச்

காதலியின் மகனுக்கு இருமல் மருந்தில் விஷம் கலந்து கொடுத்து  நாலு மணி நேரமாக மெல்ல மெல்ல துடிதுடித்து உயிரிழந்ததை தன் மடியிலேயே போட்டு ரசித்து இருக்கிறான் அந்த கொடூரன்.    தப்பியோடிய அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

 ஒடிசா மாநிலத்தில் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வநாத்.  இவரது மனைவி காயத்ரி.  காயத்ரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.  அவருக்கு மூன்று வயதில் மகன் இருந்திருக்கிறான். 

 இந்த நிலையில் தான் காயத்திரியின் அழகில் மயங்கிய பிஸ்வநாத் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  திருமணத்திற்கு முன்பு வரைக்கும் காயத்ரி மகனை தன் மகன் போலவே தந்தையுடன் பாசத்துடன் வளர்ப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.  ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்த சிறுவன் இருப்பதையே இடையூறாக நினைத்து வந்திருக்கிறார்.

அ

 இதை அறிந்த காயத்ரி காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் தான் காயத்ரியின் மூன்று வயது மகனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது . இருமலும் தொடர்ந்து இருந்திருக்கிறது.  அப்போது பிஸ்வநாத் இடம் இருமல் மருந்து வாங்கி வருமாறு சொல்லியிருக்கிறார் .

இருமல் மருந்து வாங்கி வந்த பிஸ்வநாத் குழந்தையை மடியில் போட்டு இருமல் மருந்து கொடுத்திருக்கிறார்.  அப்போதும் குழந்தைக்கு சிறுவனுக்கு வாந்தி எடுத்து இருக்கிறது.   மீண்டும் மீண்டும் இருமல் மருந்து கொடுத்திருக்கிறார்.  காலை 11 மணிக்கு இருமல் மருந்து கொடுத்த நிலையில் மாலை 3 மணி அளவில் குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்திருக்கிறது.

 அந்த நாலு மணி நேரமும் குழந்தையை தாயிடம் கொடுக்காமல் தனது மடியிலேயே வைத்திருந்து அந்த குழந்தை மெல்ல மெல்ல துடிதுடித்து உயிரிழந்ததை ரசித்திருக்கிறான் அந்த கொடூரன்.  இவ்வளவு நேரமும் மடியிலேயே வைத்திருக்கிறான் பிஸ்வநாத் என்று  காயத்திரிக்கு சந்தேகம் வந்திருக்கிறது . அதற்கேற்றார் போல் குழந்தையும் இறந்து விட்டதால்,  என்ன செய்தாய் என்று  கேட்க சரியான பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். 

 இதில் சந்தேகம் வந்த காயத்ரி,  போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்.  இது தெரிந்ததும் பிவிஸ்வநாத் தலைமறைவாகி இருக்கிறார்.  சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அவர் தப்பிச்செல்ல முயன்றிருக்கிறார் . இடையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர் . அப்போதுதான் இருமல் மருந்தில் விஷம் கலந்து காயத்ரியின் மகனுக்கு கொடுத்ததை சொல்லி இருக்கிறார்.

  குழந்தை சாகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க தன் மடியிலேயே  போட்டு கண்காணித்து வந்தேன் என்று கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சொல்லி இருக்கிறான் அந்த கொடூரன்.  காயத்ரியின் அழகுக்காக மட்டுமே அவளை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எங்களின் இல்லற வாழ்க்கைக்கு அவளின் குழந்தை இடையூறாக இருந்தது.   அதனால்தான் இருமல் மருந்தில் விஷம் கலந்து துடிதுடித்து உயிரிழந்ததை மடியில் போட்டு ரசித்தேன் என்று சொல்லி இருக்கிறான்.