பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி! கூச்சலிட்டதால் கழுத்த அறுத்த காமுகன்
நரிக்குடியில் பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (25). இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நரிக்குடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் இன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் திடீரென பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை மடக்கி பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நரிக்குடி காவல் நிலைய போலீசார் அப்துல் அஜீஸை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நரிக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


