அமைச்சரின் ஆதரவாளர் வெடிகுண்டு வீசி படுகொலை

 
se

பாஜக பிரமுகரும் உள்துறை அமைச்சரின் ஆதரவாளருமான செந்தில்குமரன் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 புதுச்சேரி மாநிலத்தின் மங்களம் தொகுதியின் பாஜக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமரன்.  வில்லியனூர் கனவாபேட்டை பகுதியைச் சேர்ந்த இந்த செந்தில்குமரன் புதுச்சேரி மாநிலத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

ku

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வில்லியனூரில் தனது வீட்டுக்கு அருகே இருக்கும் பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று அவர் மீது வெடிகுண்டை வீசி இருக்கிறது.   இதில் நிலை குலைந்து கீழே விழுந்து கிடந்த அவரை அந்த மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள். 

 இதை பார்த்ததும்  அங்கிருந்த மக்கள் பதறி அடித்து ஓடி விட்டார்கள்.  கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டு இருக்கின்றன.  அதன் பின்னர்தான் அந்த மர்ம கும்பல் சாவகாசமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறது. 

 தகவல் அறிந்தது அங்கு வந்த போலீசார் செந்தில்குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

செந்தில்குமரனின் உறவினர்களும் ஆதரவாளர்களும் அங்கே திரண்டு வந்து போலீசாரை முற்றுகையிட்டு கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமரனை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த படுகொலை சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.