காதலனுக்கு செல்போன் வாங்கித்தர கொள்ளையடித்த பள்ளி மாணவி
காதலனுக்கு செல்போன் வாங்கி தர வேண்டும் என்பதற்காக மூதாட்டியை அடித்து கொடூரமாக தாக்கி நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்று இருக்கிறார் பள்ளி மாணவி. போலீஸ் விசாரணையில் அந்த மாணவி பிடிபட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டம் பூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஜலஜா. அறுபது வயதான இந்த மூதாட்டி வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி ஒருவர் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார் . மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றித் தரும்படி கேட்டு இருக்கிறார். அதற்கு ஜலசா மறுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்து சிறுமி, மிளகாய் பொடியை எடுத்து பாட்டியின் முகத்தில் வீசி இருக்கிறார் . இதில் பார்ட்டி அலறி துடித்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து சுத்தியலால் மூதாட்டியின் முதுகு, பின் தலையில் தாக்கி இருக்கிறார். இதில் பாட்டிக்கு ரத்தம் வெளியேறி இருக்கிறது. அந்த நேரம் பார்த்து மூதாட்டியிடம் இருந்து செயின், மோதிரத்தை கழட்டி விட்டு தப்பி ஓடி இருக்கிறார் .
அங்கிருந்து ரத்தம் சொட்ட சொட்ட வீட்டுக்கு வெளியே வந்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைத்து இருக்கிறார். அப்பகுதியினர் ஓடி வந்து மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் தர போலீசார் வழக்கு பதிவு செய்து நேரில் வந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி பிளஸ் ஒன் படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சிறுமி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். காதலனுக்கு செல்போன் வாங்கி தர வேண்டும் என்பதற்காகத்தான் கொல்லையில் ஈடுபட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின்னர் அவரை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி, சிறார் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.