அதன் பின்னர் அந்தரங்க பகுதியில் கூர்மையான ஆயுதங்களால்.. கொடூர சிறுவன்

 
h

வாயில் துணியை வைத்து அடைத்து, முகத்தை பாலித்தீன் பைகளால் மூடி,  கை கால்களை கட்டி போட்டு, கொடூரமாக தாக்கி மயங்கிய நிலையில் இருந்த போது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதன் பின்னர் அப்பெண்ணின் அந்தரங்க பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி,  பின்னர் அரிவாளால் உடலின் பல இடங்களில் சரமாரியாக வெட்டி சிதைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறான் அந்தச் சிறுவன்.  மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டத்தில் உள்ளது கைலாசபுரி கிராமம்.  இக் கிராமத்தில் உள்ள பெண் வீட்டிற்கு அடிக்கடி பக்கத்து வீட்டு சிறுவன் டிவி பார்க்க சென்றிருக்கிறான்.   அந்த சமயத்தில் அப்பெண்ணின் செல்போன் காணாமல் போய் இருக்கிறது.    தன் வீட்டிற்கு டிவி பார்க்க வந்த சிறுவன் தான் எடுத்து விட்டதாக பெண் புகார் கூறியிருக்கிறார்.  இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தீராத பகை இருந்து வந்திருக்கிறது.

 தன்னை அவமானப்படுத்திய அப்பெண்ணை பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்திருக்கிறான் அச்சிறுவன்.  

a
சம்பவ நாளில் அப்பெண் வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து கொண்ட சிறுவன் வீட்டிற்குள் திடீரென்று நுழைந்து பெண்ணை கடுமையாக தாக்கி பின்னர் அருகில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த கட்டடத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறான்.   அப்பெண் சத்தம் போட முடியாத அளவிற்கு வாயில் துணியை வைத்து திணித்திருக்கிறான். 

 பின்னர் பாலித்தீன் பையால் முகத்தை மூடிவிட்டு கை, கால்களை கட்டிப் போட்டு இருக்கிறான்.   அப்போதும் சரமாரியாக பெண்ணை தாக்கியிருக்கிறார்.  இதில் பெண் மயங்கி கிடந்திருக்கிறார்.  அப்போது அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.   அதன் பின்னர் அந்தப் பெண்ணின் அந்தரங்க பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியிருக்கிறான்.   அப்படியும் ஆத்திரம் தீராத அந்த சிறுவன் அரிவாளை எடுத்து பெண்ணின் உடலில் பல பகுதிகளில் கொடூரமாக வெட்டி  சிதைத்து இருக்கிறான்.   பெண் உயிரிழந்த விட்டதும் அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறான்.

m

 பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் போலீசாருக்கு செல்ல,  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது தான் பக்கத்து வீட்டு சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.  அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தான் அப்பெண்ணை கொடூரமாக கொன்று கொலை செய்ததை வாக்குமூலம் அளித்திருக்கிறான்.   அதன் பின்னர் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறார் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்துள்ளனர்.