அதிமுக வார்டு உறுப்பினர் துடிக்க துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை!

 
அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர்  சரமாரியாக வெட்டி கொலை - கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

துக்க நிகழ்ச்சிக்காக சென்ற அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள், அவரது மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anbarasu

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் இரண்டாவது மகனும் ஒன்பதாவது வார்டு உறுப்பினரானுமான அன்பரசு நேற்றிரவு கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நவீன்குமார் என்பவரின் படத்திறப்பு விழாவிற்காக சென்றுள்ளார். அன்பரசு உட்பட  அவரது நண்பர்கள் 7 பேர் காரில் சென்றுவிட்டு அங்குள்ள சுடுகாட்டு வாசலில் அமர்ந்து இரவு சுமார் 10:30 பணியாளவில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு ரவுடி கும்பல் அன்பரசு எடுத்து வந்த கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காரின் கண்ணாடி உடைந்துள்ளது.

இதனை கண்டதும் மது அருந்தி கொண்டிருந்த 7 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கையில் மறைத்து வைத்திருந்த வீச்சறிவாளால் ரவுடி கும்பல் அன்பரசை ஓட ஓட விரட்டி இரண்டு கை, கால்கள், கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமரியாக வெட்டி சாய்த்தது.  இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  பின்னர் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அதிமுக வார்டு உறுப்பினர் வெட்டி கொலை - உறவினர்கள் சாலை மறியல்!

இதனை தொடர்ந்து அன்பரசுவின் உறவினர்கள் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை ரத்தினமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டுத்தில் ஈடுபட்டனர் அன்பரசுவை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தி நடத்தி குற்றவாளிகளை உடனே கைது செய்வதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.