ஆம்புலன்ஸ் டிரைவர் தலையில் கல்லைப்போட்டு கொலை- செங்கல்பட்டு பயங்கரம்

 
vi

 விஜயகுமார் என்கிற தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர்.  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.   தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதால் தன்னுடன் பணிபுரியும் ராஜா, தர்மதுரை, அஜித் ஆகிய நபர்களுடன் சேர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகுமார் தனது முதலாளியிடம் அஜித் சரியாக வேலை செய்யவில்லை என்று தன்னுடன் வேலை பார்ப்பவர் பற்றி புகார் கூறியிருக்கிறார்.  இதனால் அஜித்திற்கும் விஜயகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  

v 

 நேற்று நள்ளிரவு வழக்கம்போல அஜித், ராஜா, விஜயகுமார் ஆகியோர் ஒன்றாக வாடகை வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்கள். அப்போது இரவு ஒரு மணி அளவில் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அஜித்திற்கு போன் செய்து ஃப்ரீசர் பாக்ஸ் எடுத்துச் சென்று நெம்மேலி அருகே உள்ள பொல்லேரி கிராமத்தில் வைத்து விட்டு வரும் படி கூறியிருக்கிறார்.   அதன்படியே சென்றுவிட்டு சுமார் 2 மணி அளவில் அஜித் திரும்பி வந்து பார்த்தபோது விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் அடிப்பட்டு கிடந்துள்ளார்.   உயிரிழந்து கிடந்த விஜயகுமாரின் அருகில் ராஜா போதையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படித்தான் அஜித் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

 இதையடுத்து செங்கல்பட்டு நகர காவல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித், தர்மதுரை, ராஜா ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு விஜயகுமாரிடம் அஜித் சண்டை போட்டிருக்கிறார். அப்போது அஜித் வீட்டிற்கு வெளியே இருந்த உருளை கல்லை தலையில் தூக்கிப் போட்டு விஜயகுமாரை கொலை செய்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.  இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.