ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி மகளை கழுத்தை நெரித்து கத்தியால் அறுத்து வீசிய தந்தை

 
k

தற்கொலை செய்து கொள்ள முடிவில் கத்தியுடன் வீட்டை விட்டு கிளம்பிய தந்தையுடன் வர வேண்டும் என்று மகள் அடம்பிடிக்க எவ்வளவோ சமாதானம் செய்தும் கேட்காததால்  சிறுமியையும் பைக்கில் அழைத்துக் கொண்டு சுற்றி இருக்கிறார்.  ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி மகளின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்.   அப்படியும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கழுத்தை அறுத்து அப்பகுதியில் இருந்த விறகு தொட்டியில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் தந்தை.

 ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில்  குர்ஹாமா என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது இக்பால் கட்டானா.  இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  திருமணமான இவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.  

d

 கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  அப்படித்தான் கடந்த 29ஆம் தேதி அன்று மாலை வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறார்.   இதில் ஆத்திரம் அடைந்து தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

 பைக்கில் ஏறி புறப்பட்டபோது 8 வயது மகளும் ஓடிச் சென்று அவருடன் செல்வதாக பிடிவாதம் பிடித்திருக்கிறார்.  வீட்டிலேயே இரு என்று சொல்லவும் கேட்காமல் அந்தச் சிறுமி அழுது இருக்கிறார்.   பத்து ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கி சாப்பிட்டு விட்டு இருக்கும்படி சொல்லி இருக்கிறார்.   அப்போதும் தந்தையை விட்டு செல்ல மறுத்திருக்கிறார்.

 இதனால் வேறு வழி இன்றி  8 வயது மகளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.   மகளை பைக்கில் வைத்துக் கொண்டு 45 நிமிடங்களுக்கு மேல் சுற்றித்திரிந்து இருக்கிறார்.  பின்னர் தன் தற்கொலைக்கு மகள் இப்படி முட்டுக்கட்டையாக இருக்கிறாரே என்று ஆத்திரம்  அடைந்திருக்கிறார். 

 ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் தலைக்கு ஏறி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் . அப்படியும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கழுத்தை அறுத்து அப்பகுதியில் இருந்த விறகு தொட்டியில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்.

 மகள் எங்கே என்று மனைவி கேட்கவும்,  தன்னுடன் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்.  ஆனால் அவருடன் சென்றதை அப்பகுதியினர் பலரும் பார்த்துவிட்டு சொல்ல,  சந்தேகம் கொண்ட மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்குள் அந்த சிறுமி உடலை அப்பகுதியினர்  கண்டெடுத்துள்ளனர் . அதன் பின்னர் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   அவரை போலீசார் கைது செய்துள்ளனர்