மருமகனுடன் உறவு வைத்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய அத்தை கைது

 
க்

சிறுவனுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த அத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது  மருமகனை சந்திக்க அடிக்கடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு  சென்றிருக்கிறார்.  அங்கு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி மருமகனான சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்திருக்கிறார்.

ப்

 தனது முன்னாள் கணவர் உதவியுடன் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.  அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மருமகனிடம் காட்டி மிரட்டி ஆறு லட்சம் ரூபாய் பணமும் நகைகளும் கறந்திருக்கிறார்.

 வீட்டில் இருந்த நகைகள் ,பணம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் விசாரித்ததில்,  தற்போது அத்தையின் மிரட்டல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.