"ஆட்டோவில் கூட்டிட்டு போய் ஆசைய தீர்த்துக்கிட்டியே.."-பதினேழு வயசு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 17வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் சென்னையை அடுத்த சோழவரம், ஆத்தூர், பெரியார் நகர், தீரன் சின்னமலை தெருவை சேர்ந்த30 வயதான லட்சுமணன் ,ஒரக்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் சோழவரம் மபஸ்கான்பேட்டையை சேர்ந்த 17வயது பெண் வேலை செய்து வருகிறார் . அவர் அந்த லட்சுமணன் ஆட்டோவில் அடிக்கடி பணி நிமித்தமாக போகும்போது இருவரும் காதலித்து நெருங்கி பழகி வந்துள்ளார்.
அதன் பிறகு அந்த லட்சுமணனிடம் அந்த பெண் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் .ஆனால் அந்த லட்சுமணன் , அந்த பெண்ணிடம் ஆசையை தீர்த்துக்கொண்டு தப்பித்து ஓடி விடவேண்டும் என்ற எண்ணத்தில் பழகி வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த 29 ம் தேதி அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அந்த பெண்ணை அவரின் ஆட்டோவில் கூட்டி சென்றார் .பிறகு கோவிலுக்கு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிவிட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தன் பெற்றோருடன் அந்த லட்சுமண் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ஆட்டோ ட்ரைவரை தேடி வந்தனர்
இப்போது போலீசார் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் லட்சுமணனை கைது செய்து ,சிறையில் அடைத்தனர் .